பிரபல பாலிவுட் நடிகர் சல்மானகான் வீட்டின் மீது கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாலை 4.55 மணி அளவில் 2 மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த விவகாரத்தில் ஈடுபட்ட விக்கி குப்தா (24), சாகர் பால் (21) ஆகியோரை மும்பை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இவர்களுக்கு துப்பாக்கிகள் வழங்கியதாக அனுஜ் தபன், சோனு சுபாஷ் சந்தர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், தற்போது விசாரணைக் காவலில் இருந்த அனுஜ் தபன் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.