கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த 60 ஆண்டுகளாக சக்கரவர்த்தி துயில் மாளிகை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ரங்க சமுத்திரத்தில் மைசூர் ரோட்டில் சக்கரவர்த்தி டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் புதிய ஜவுளிக்கடை அமைந்துள்ளனர்.
இதன் திறப்பு விழா நாளை காலை திங்கட்கிழமை 7: 00 காலை மணிக்கு நடக்கிறது. இந்த விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் கலந்துகொண்டு புதிய ஜவுளி கடையை திறந்து வைக்கிறார். சத்தியமங்கலத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் விழாவில் கலந்து கொள்கின்றனர்.
திறப்பு விழாவை முன்னிட்டு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம் சக்கரவர்த்தி துகிள் மாளிகை குடும்பத்தினர் செய்து வருகின்றனர்