ஈரோடு எம்.பி., உடலுக்கு வைகோ கண்ணீர் அஞ்சலி

10496பார்த்தது
ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5.15 மணியளவில் அவர் காலமானார். தொடர்ந்து அவரது பிரேத பரிசோதனை முடிவுற்ற நிலையில் எம்பி கணேசன் மூர்த்தி பூத உடலுக்கு மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ கண்ணீர் விட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து கணேசமூர்த்தியின் உடல் இறுதிச் சடங்கு செய்வதற்காக அவல்பூந்துறை அருகே உள்ள குமாரவலசு பகுதியில் உள்ள அவரது தோட்டத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.