கைப்பந்து பயிற்சிமுகாம் நிறைவுவிழாவில் மொடக்குறிச்சி எம்எல்ஏ

63பார்த்தது
மாநில அளவில் நடைபெற்ற கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு விழாவில் மொடக்குறிச்சி எம். எல். ஏ

ஈரோடு எக்ஸலன்ஸ் அகாடமி மூலம் நடத்தப்பட்ட மாநில அளவிலான கைப்பந்து பயிற்சி முகாம் பெருந்துறை ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இம்முகாமிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு மற்றும் 3ம் மாநில அளவில் கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றி வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். கைப்பந்து பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளரும் பயிற்சியாளருமான என். எம். பிரதீப் விழாவினை ஏற்பாடு செய்திருந்தார். விழாவில் கல்லூரியின் தாளாளர் மற்றும் முதல்வர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.