பழனி: பிப். 5ல் தைப்பூச திருவிழா துவக்கம்

73பார்த்தது
பழனி: பிப். 5ல் தைப்பூச திருவிழா துவக்கம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழா பிப்ரவரி 5-ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 10-ல் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம், அன்று மாலை வெள்ளித் தேரோட்டம் நடைபெறும். விழாவின் ஏழாம் நாளான பிப்ரவரி 11 மாலை 4:45 மணிக்கு தைப்பூச விழா தேரோட்டம், பிப்ரவரி 14 மாலை தெப்பத் தேர் திருவிழா நடைபெறுகிறது. இதன் பின் இரவு கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவடைகிறது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி