குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகள்

62பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செந்துறைரோடு ஆர். சி மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள கலைநகர் குடியிருப்பு பகுதியில் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் வழக்கமாக வேலைக்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தபோது சாலையின் அருகே உள்ள முள் புதருக்குள் 30க்கும் மேற்பட்ட சணலால் சுற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் சிதறி கிடந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து நத்தம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி தலைமையிலான போலீசார் சிதறி கிடந்த நாட்டு வெடிகுண்டுகளை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

சனிக்கிழமை நத்தம் ஆவிச்சிபட்டி அருகே வெடி விபத்தில் உடல் சிதறி இருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குடியிருப்பு மற்றும் பள்ளிக்கு அருகிலேயே நாட்டு வெடிகள் கிடந்தது அப்பகுதி பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடியிருப்பு பகுதிக்குள் நாட்டு வெடிகளை வீசி சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து நத்தம் போலீசார் விசாரணை. மேற்கொண்டு இது தொடர்பாக நத்தம் கலைநகரில் வசித்துவரும் மாரிமுத்து மகன்கள் மதிவாணன் வயது 32, மற்றும் அவரது அண்ணன் மதன்குமார் வயது 34 ஆகியோரை கைது நத்தம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி