தர்மபுரி: வடசந்தையூரில் 32 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

75பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொம்மிடி அருகே வடசந்தையூரில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் ஆடுகள் விற்பனைக்காக பிரத்தியேகமான வார சந்தை நடைபெற்று வருவது வழக்கம் அந்த வகையில் நேற்று (ஏப்ரல்10) நடைபெற்ற ஆட்டுகள் வார சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம் திருவண்ணாமலை திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஆடுகளின் ரகம் மற்றும் அளவைப் பொறுத்து 3, 000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 18, 000 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டு, மொத்தமாக நேற்று ரூ. 32 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி