தர்மபுரியில் வெளியூர் நபர்கள் வெளியேற ஆட்சியர் உத்தரவு

71பார்த்தது
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி IAS தெரிவித்ததாவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, எதிர்வரும் 19. 04. 2024 அன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தல் பணிகள் சுமூகமாகவும். நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு. இந்திய தேர்தல் ஆணையத்தால் இன்று மாலை 06. 00 மணியுடன் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் ஓய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் நாளை (17. 04. 2024) மாலை 06. 00 மணிக்கு மேல் எந்த வகையிலுமான பிரச்சாரமும் மேற்கொள்ளக்கூடாது.

மேலும், பிரச்சாரம் ஓய்ந்த உடன்17. 04. 2024 இன்று மாலை 06. 00 மணிக்கு மேல் வெளியூர்களிலிருந்து இருந்து வரவழைக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள், கட்சி
தொண்டர்கள், ஊர்வலம் மற்றும் பிரச்சாரத்திற்காக வரப்பெற்ற கட்சி தொண்டர்கள், உள்ளிட்டோர் மற்றும் கல்யாணமண்டபம்/சமூகக் கூடங்கள், ஓட்டல்கள் மற்றும் விடுதிகள் (Lodges) போன்றவற்றில் தங்கியுள்ள வெளியூர் நபர்கள் அனைவரும் தருமபுரி பாராளுமன்ற தொகுதியை விட்டு வெளியேற வேண்டுமென
தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட விதிகளை மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டணை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்