டூவீலர் மோதி வாலிபர் பலி

4462பார்த்தது
தர்மபுரி மாவட்டம், தொப்பூர் சுங்கச்சாவடி அருகே நாராயணபுரம் பிரிவு சாலையில், டூவீலர் மோதி 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலமாக கிடந்தார். இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில், விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தில் இறந்த வாலிபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி