இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை 4 பேர் மீது வழக்குப்பதிவு

2240பார்த்தது
நல்லம்பள்ளி அருகே பாளையம் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி (வயது 26). இவருக்கும், சேலம் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த மதன்குமார் (30) என்பவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன்பிறகு சேலத்தில் கணவருடன் வசித்து வந்தார். திருமணத்தின் போது காயத்ரிக்கு 30 பவுன் நகை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குறைவான நகைபோட்டதாக கூறியும், கூடுதல் வரதட்சணை தர வேண்டும் என்று காயத்ரியை கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே கர்ப்பமடைந்த காயத்ரி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். அதன் பின்பு பல மாதங்கள் ஆகியும் கணவர் தன்னை வந்து பார்க்கவில்லை என்று தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று காயத்ரி புகார் அளித்தார். அதன் பேரில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து காயத்ரியின் கணவர் மதன்குமார் மற்றும் அவருடைய பெற்றோர் உள்ளிட்ட 4பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி