மாரடைப்பால் மரணமடைந்த காவல் துணை கண்காணிப்பாளர்

62பார்த்தது
மாரடைப்பால் மரணமடைந்த காவல் துணை கண்காணிப்பாளர்
கோயமுத்தூர் மாவட்ட சூலூர் தாலுகா சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் சிகிச்சையில் இருந்தபோது திடீர் மரணம் அடைந்தார். கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் வெற்றிச்செல்வன். இவருக்கு வயது 56. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக அதிகாலையில் ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக, சூலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். இடையில் இவரது உடல் நிலையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அது தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். கடந்த மூன்று நாட்களாக கோவையில் உள்ள தலைமை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வெற்றிச்செல்வன், இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு காவல் துறை வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி