பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கடும் வெப்பம் காரணமாக நேற்று (மே 31) எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியன. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 50 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.