கட்டுமான பணியின்போது 2 பேர் பலி - முதலமைச்சர் நிவாரணம்

78பார்த்தது
கட்டுமான பணியின்போது 2 பேர் பலி - முதலமைச்சர் நிவாரணம்
கோயம்புத்தூர் சின்னவேடம்பட்டி கிராமத்தில் நேற்று (மே 31) மாலை தனியருக்குச் சொந்தமான இடத்தில் புதியதாக வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த குமார் (29) ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் (27) ஆகியோர் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தனர். இந்த நிலையில், உயிரிழந்தவர்களது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி