தம்பிப்பேட்டை: குடிநீர் தொட்டி வைக்க கோரிக்கை

62பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் தம்பிப்பேட்டை பகுதியில் உள்ள பயணிகள் நிறுத்தம் இடத்தில் கோடை கால தண்ணீர் பந்தல் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் தண்ணீர் பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.