மாஃபியா பிடியில் போட்டித் தேர்வுகள்- கவுரவ் கோகோய்

77பார்த்தது
மாஃபியா பிடியில் போட்டித் தேர்வுகள்- கவுரவ் கோகோய்
இந்தியாவில் தேர்வுகள் எல்லாம் மாஃபியாக்கள், சுயநல குடும்பங்களின் பிடியில் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர், "வினாத்தாள்கள் திருடி விற்கும் மாஃபியாக்கள் பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்றவர்களால் ஊக்கம் பெறுகின்றனர். நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையே வினாத்தாள் திருடும் கும்பல் நாசமாக்கிவிட்டது. இந்திய கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் தலையீட்டால் திறமைமிக்க மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது" என்று தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.