கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பகுதிக்கு உட்பட்ட. மானாம்பள்ளி பவர் ஹவுஸ் பகுதியில் பழனிச்சாமி தற்காலிக யானை முகாமில் வசித்து வருகின்றார். வயது 45. s/o ராமு இவர் இன்று மானாம்பள்ளி பவர் ஹவுஸ் ஆற்றுப்பகுதியில் குளிக்கச் சென்ற பொழுது எதிர்பாராமல் முதலை அவர் காலை பிடித்ததில் படுகாயம் அடைந்தார் உடனே அப்பகுதியில் இருந்து வால்பாறை அரசு மருத்துவமனை பகுதிக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை செய்த பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மற்றும் வனத்துறையினர் பத்தாயிரம் நிதி உதவி வழங்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.