போதை மாத்திரைகளுடன் வாலிபர் அதிரடி கைது

71பார்த்தது
போதை மாத்திரைகளுடன் வாலிபர் அதிரடி கைது
கோவை குறிச்சி குளம் அருகே போத்தனூர் போலீசார் நேற்று (செப்.,19) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குளக்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அன்பர் சாதிக் (30) என்பதும் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததும் தெரிய வந்தது இதனை அடுத்து போத்தனூர் போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 40 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
Job Suitcase

Jobs near you