விருகம்பாக்கம் - Virugampakkam

சென்னை: கள்ளச்சந்தையில் ஐ. பி. எல். , டிக்கெட்: 11பேர் கைது

சென்னை: கள்ளச்சந்தையில் ஐ. பி. எல். , டிக்கெட்: 11பேர் கைது

ஐ. பி. எல். கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக அடுத்தடுத்து பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. அவற்றில் முக்கியமானது கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வது. கடந்த முறை நடந்த போட்டியின் போது கவுன்டரிலேயே கூடுதல் விலைக்கு டிக்கெட் பெற்றதாக ரசிகர்கள் புகார் கூறினர்.  டிக்கெட் கட்டணம், கேளிக்கை வரி, ஜிஎஸ்டி தொடர்பான பிரேக் அப் எதுவும் இல்லாமல் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இம்முறை நடந்த போட்டியின் போது கள்ளச் சந்தையில் தனி நபர்கள் டிக்கெட் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. உண்மையான கட்டணத்தை விட பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி இவர்கள் ரசிகர்களிடம் விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளனர். சென்னை சேப்பாக்கத்தில் நேற்று (ஏப்ரல் 05) சென்னை- டில்லி இடையே போட்டி நடந்தது. கள்ளச்சந்தையில் ஐ. பி. எல். டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக ரசிகர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டனர். 34 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஐ. பி. எல். கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கான டிக்கெட் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதால், கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வீடியோஸ்


சென்னை
சென்னை: பனகல்பூங்கா கோடம்பாக்கம் சுரங்கப்பாதை பணி
Apr 07, 2025, 02:04 IST/ராதாகிருஷ்ணன் நகர்
ராதாகிருஷ்ணன் நகர்

சென்னை: பனகல்பூங்கா கோடம்பாக்கம் சுரங்கப்பாதை பணி

Apr 07, 2025, 02:04 IST
பனகல்பூங்கா - கோடம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணியை வரும் செப்டம்பருக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-வது வழித்தடம் முக்கியமானதாக இருக்கிறது. இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப்பாதையாகவும் அமைகிறது.  9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் இடம்பெற உள்ளன. தற்போது, பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இப்பாதையில் களிமண்ணை வெளியேற்றுவது, அடுக்குமாடி குடியிருப்புகள் அருகே சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை இயக்குவது உள்பட பல்வேறு சவால்கள் காரணமாக, சுரங்கப்பாதை பணி மெதுவாக நகர்ந்தது. கடந்த மாதம் "பெலிகன்" சுரங்கம் தோண்டும் இயந்திரம் 1.3 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்தது. அதாவது, இந்த இயந்திரம் கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை அடைந்தது. மற்றொரு சுரங்கம் தோண்டும் இயந்திரமான "பிகாக்" விரைவில் இலக்கை அடையவுள்ளது.