விவசாயிகளை உரம் வாங்க நிர்பந்திக்கக் கூடாது என வழக்கு

63பார்த்தது
விவசாயிகளை உரம் வாங்க நிர்பந்திக்கக் கூடாது என வழக்கு
நபார்டு வங்கி மூலமாக வட்டியில்லா கடன் பெறும் விவசாயிகளை இயற்கை உரம் வாங்கும்படி நிர்பந்திக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் நபார்டு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கி வருகிறது. இந்த கடன் வசதியைப் பெறும் விவசாயிகள் டான்ஃபெட் வழங்கும் இயற்கை உரத்தை வாங்க வேண்டும் என நிர்பந்திக்கப்படுவதாகக்கூறி கடலூரைச் சேர்ந்த விவசாயி ஜோதிபாசு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கே. குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம். புருஷோத்தமன் ஆஜராகி, இயற்கை உரம் என்ற பெயரில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது, என வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி