தமிழகத்தில் செப். 19 வரை மழை பெய்ய வாய்ப்பு

58பார்த்தது
தமிழகத்தில் செப். 19 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் நாளைமுதல் 19-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 65 கி. மீ. வேகத்திலும்16, 17-ம் தேதிகளில் அதிகபட்சமாக 50 கி. மீ. வேகத்திலும் இன்று சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி