மரவள்ளிக் கிழங்கு விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி!

51பார்த்தது
மரவள்ளிக் கிழங்கு விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி!
நாமக்கல்: பரமத்தி வேலூர் வட்டாரத்தில் மரவள்ளிக் கிழங்கின் விலை டன்னுக்கு ரூ.1,000 வரை உயர்வு அடைந்துள்ளது. கடந்த வாரம் மரவள்ளிக் கிழங்கு ஒரு டன் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது டன்னுக்கு ரூ.1,000 வரை விலை உயர்வடைந்து டன் ரூ.11 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக் கிழங்கு டன் கடந்த வாரம் ரூ.11 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது டன்னுக்கு ரூ.1,000 விலை உயா்வடைந்து ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. மரவள்ளிக் கிழங்கின் வரத்து குறைந்ததால் விலை உயர்வடைந்துள்ளதாகவும், மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி