ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் மீது தடியடி (வீடியோ)

70136பார்த்தது
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியை காண தமிழகம் முழுவதிலிருந்தும் ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்த வண்ணம்
உள்ளனர். ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளர்.
அப்போது போட்டியை எப்படியாவது காணவேண்டும் என முண்டியடித்து உள்ளே செல்ல பொதுமக்கள் முயற்சித்தனர். இதனையடுத்து கூட்டம் தொடர்ந்து குவிந்து வந்ததை அடுத்து கூட்டத்தை கலைக்க போலீசார் திடீரென தடியடி நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.