கேன்சர் முக்த் பாரத் அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் உதவி மையத்தை தொடர்பு கொள்வோரின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவீதம் பேர், தங்கள் நோய் குறித்து இரண்டாவது பரிசோதனை தகவல் பெறுகின்றனர். குறிப்பாக இவர்கள் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. புற்றுநோயியல் நிபுணர்கள் குழுவால் தொடங்கப்பட்ட இந்த அமைப்புக்கு மார்ச் 1 முதல் மே 15 வரை 1,368 பேர் அழைப்புகள் வந்துள்ளது.