பழனி முருகன் கோவிலுக்கு ரூ.26 லட்சம் பேருந்து நன்கொடை

74பார்த்தது
பழனி முருகன் கோவிலுக்கு ரூ.26 லட்சம் பேருந்து நன்கொடை
திண்டுக்கல்: பழனி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பக்தர்கள் கிரிவலப் பாதையில் சென்று வர வசதியாக கோவில் நிர்வாகம் பேட்டரி கார்கள் ஒரு மினி பேருந்தை இயக்கி வருகிறது. பழனியைச் சேர்ந்த ஜவகர் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் சார்பில் ரூ.26 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து பழனி கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. கோவில் இணை ஆணையர் மாரிமுத்து பேருந்தை பெற்றுக் கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி