பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது

42115பார்த்தது
பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது
பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை உள்பட 12 ஆவணங்களை பயன்படுத்தி தேர்தலில் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் விவரங்களுடன் தற்போது வாக்காளர்களின் புகைப்படமும் பூத் சிலிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் அட்டையில் வாக்காளரின் பெயரில் சிறிய அளவில் எழுத்து பிழை இருந்தால் கூட வாக்களிக்க அனுமதி இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி