குழந்தையுடன் தாய் கடத்தப்பட்டாரா? போலீசார் விசாரணை

2590பார்த்தது
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கைக்களநாட்டார் தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம் இவரது மனைவி முத்துலட்சுமி. இவர் ஜெயங்கொண்டத்தில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களது இரண்டாவது மகள் நளினியை திட்டக்குடியை சேர்ந்த விநாயகம் என்பவருக்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். நளினி சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில்  விவகாரத்து வாங்கிக்கொண்டு தனது தாயார் முத்துலட்சுமியுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம்  முத்துலட்சுமி தனது மகள் நலினி மற்றும் அவரது இரண்டரை வயது பேரக்குழந்தையையும் வீட்டில் விட்டுவிட்டு  ஜெயங்கொண்டத்திற்கு வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். மீண்டும் மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த இரண்டரை வயது குழந்தையுடன் தனது மகளை நளினி காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் மகளை காணவில்லை.

இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் முத்துலட்சுமி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டரை வயது குழந்தையுடன் காணாமல் போன நளினியை தேடி விசாரித்து வருகின்றனர். மேலும் குழந்தையுடன் பெண் கடத்தப்பட்டிருப்பாரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.