பிரதமர் இல்லாதபோது அனைத்துக்கட்சி கூட்டம்!

772பார்த்தது
பிரதமர் இல்லாதபோது அனைத்துக்கட்சி கூட்டம்!
மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஜூன் 24-ம் தேதி டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும், இந்த கூட்டத்தில் இந்தியாவில் இருக்கும் அனைத்து கட்சித்தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்திக், “மணிப்பூர் 50 நாட்களாக பற்றி எரிகிறது, ஆனால் பிரதமர் அமைதியாக இருக்கிறார். பிரதமரே நாட்டில் இல்லாதபோது அனைத்துக் கட்சி கூட்டம். இந்தக் கூட்டம் பிரதமருக்கு முக்கியமில்லை என்பது தெளிவாகிறது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி