கேரள ஆளுநர் ஆரிஃப் கான் இன்று (டிசம்பர் 12) காலை நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற போது, அவரின் காரை மறித்து, எஸ்எஃப்ஐ அமைப்பினர்
போராட்டம் நடத்தினர். இதனால் கோபமான ஆளுநர் அவர்களை கடுமையாக திட்டினார். இதையடுத்து எஸ்எஃப்ஐ அமைப்பினர் ஆவேசம் அடைந்தனர். இந்நிலையில், ஆளுநருக்கு எதிரான
போராட்டம் குண்டர்களின் கேவலமான செயல் என்று
காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் விமர்சனம் செய்துள்ளார்.