இரட்டை பெண் குழந்தைகளை கொன்ற கொடூர தந்தை

73பார்த்தது
இரட்டை பெண் குழந்தைகளை கொன்ற கொடூர தந்தை
ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் ​​மாவட்டத்தில் மெந்தர் துணைப்பிரிவின் சாய்ஸ்லா கயானி கிராமத்தில் புதிதாகப் பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகள் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டனர். தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த விரக்தியில் தந்தை முகமது குர்ஷித் கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் குற்றவாளியான முகமது குர்ஷித்தை கைது செய்தனர். தொடர்ந்து, இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.