ஓசூர் அருகே ஹாலிவுட் படங்களில் பார்ப்பது போன்ற பிரம்மாண்ட மலைப்பாம்பை நேரில் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கிராமத்திற்குச் செல்லும் மண் சாலையில் அந்த மலைப்பாம்பு மெதுவாக ஊர்ந்து சென்றது. ஊருக்குள் அனகோண்டா பாம்பு வந்துவிட்டது என தகவல் பரவியதால் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதையடுத்து, கிராம மக்களே ஒன்றிணைந்து மலைப் பாம்பை வனப்பகுதிக்குள் விரட்டினர். தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், மலைப்பாம்பை அடர்ந்த வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.