திருப்பூர் குழிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகம்மாள் (22) என்ற பெண்ணிற்கு நேற்று (ஏப்ரல் 8) பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அங்கு சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. உடனே அவரது உறவினர்கள், அப்பெண்ணை தொட்டில் கட்டி சுமார் 7 கி.மீ., தூரம் வரை தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். சாலை வசதியின்றி மக்கள் நாள்தோறும் அவதிபட்டு வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.