ஏற்காடு மலர்க்கண்காட்சி மே 30 வரை நீட்டிப்பு

74பார்த்தது
ஏற்காடு மலர்க்கண்காட்சி மே 30 வரை நீட்டிப்பு
சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு வார இறுதி நாட்கள் மற்றும் கோடை விடுமுறை காலங்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அந்த வகையில், உதகை மலர்க்கண்காட்சி முடிவடைந்தை நிலையில், கடந்த 22ஆம் தேதி ஏற்காட்டில் மலர்க்கண்காட்சி தொடங்கியது. ஏற்காட்டில் 47வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி நாளையுடன் நிறைவடைய இருந்த நிலையில், வருகிற மே 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி