திமுக அரசின் மதுவிலக்கு திருத்தச் சட்டம் பலன் தருமா?

55பார்த்தது
திமுக அரசின் மதுவிலக்கு திருத்தச் சட்டம் பலன் தருமா?
தமிழக அரசின் மதுவிலக்குத் திருத்தச் சட்டம் குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் சம்மேளனத்தின் (சிஐடியூ) மாநில பொதுச்செயலாளர் திருச்செல்வன் கூறும்போது, “சட்டங்களைக் கடுமையாக்கி இருப்பதெல்லாம் சரிதான். ஆனால், அமல்படுத்துவதில் இருக்கும் பிரச்னைகளை தமிழக அரசு எப்படி சரிசெய்யப்போகிறது என்பதே கேள்வி. ஏற்கெனவே மதுவிலக்குச் சட்டம் அமலில் இருக்கிறது.

அதை சரியாக அமல்படுத்தவில்லை என்பது மரக்காணம், கள்ளக்குறிச்சி போன்ற சம்பவங்களிலிருந்து தெரியவந்திருக்கிறது. கள்ளச்சாராய விற்பனைக்கு துணைபோன அரசியல்வாதிகள் உள்பட அத்தனை பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

தொடர்புடைய செய்தி