அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்சிப் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த தடை இருப்பதால் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார் ஓபிஎஸ்.