பிரதமர் மோடி மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று (மே 30) கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார். அங்குள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருக்கிறார். இதன் காரணமாக அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை, மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை உள்ளிட்டவைகள் உள்ளன. இந்த நிலையில், "பிரதமர் மோடி கேமரா இன்றி தியானம் செய்ய வேண்டும்" என ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கேட்டுக்கொண்டுள்ளார்.