கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சின்னமுத்து - சீதா தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், பிரகாஷ் என்பவருக்கும், சீதாவுக்கும் இடையே ஏற்பட்ட தகாத உறவில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனையறிந்த சின்னமுத்து, சீதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பிரகாஷ், சின்னமுத்துவை துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சின்னமுத்து சீதாவை கத்தியால் குத்திக் கொலை செய்தார். தற்போது சின்னமுத்துவை போலீசார் தேடி வருகின்றனர்.