கள்ளக்காதலில் மனைவி.. கணவனை கொலை செய்த கொடூரம்

78256பார்த்தது
கள்ளக்காதலில் மனைவி.. கணவனை கொலை செய்த கொடூரம்
கள்ளக்காதல் உறவை கைவிட வற்புறுத்திய கணவரை, மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மாகாளிக்குடியைச் சேர்ந்த பிரபு - வினோதினி தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வினோதினிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாரதி என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை அறிந்த பிரபு தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் வினோதினியும் - பாரதியும் மதுபோதையில் இருந்த பிரபுவை அடித்து, கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.