பிரதமர் பேரணிக்கு அனுமதி மறுப்பு ஏன்? - விளக்கம்

43342பார்த்தது
பிரதமர் பேரணிக்கு அனுமதி மறுப்பு ஏன்? - விளக்கம்
கோவையில் வரும் 18-ம் தேதி நடைபெற இருந்த பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதுகுறித்து காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பிரதமருக்கு உள்நாட்டு, வெளிநாட்டு மத மற்றும் பிற தீவிரவாத அமைப்புகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. சாலையில் 4 கி.மீ. தூரத்திற்கு பேரணி நடக்கும் போது ஒவ்வொரு தனி நபரையும் சோதனை செய்வது கடினமானது. எனவே இந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என கோவை மாநகர காவல்துறை விளக்கமளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி