சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நேற்று நடந்த நூல் வெளியீட்டு விழாவில், பொன்னாடை போர்த்த வந்தவரை நடிகர் சிவக்குமார் அவமதித்த சம்பவம் பேசுபொருளானது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சிவக்குமார், சால்வை போர்த்த வந்தவர் தன்னுடைய 50 ஆண்டுகால நண்பர் என்றும், சால்வை அணிவதை நான் விரும்பாதவன் என்று தெரிந்துகொண்டும் அவர் எப்படி செய்துள்ளார். அதேபோல் பொது இடத்தில் நானும் அப்படி நடந்துகொண்டு தவறு, அதற்காக வருந்துகிறேன் என சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.