எச்சரிக்கை: தமிழகத்தில் கடல் அலைகள் 4 மீட்டர் வரை எழும்பும்

74பார்த்தது
எச்சரிக்கை: தமிழகத்தில் கடல் அலைகள் 4 மீட்டர் வரை எழும்பும்
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, புயலாக மாற இருக்கும் நிலையில் இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென் தமிழக கடற்கரை பகுதியில் குளச்சல் முதல் கீழக்கரை வரையிலும், வட தமிழக கடற்கரைப் பகுதியில் பழவேற்காடு முதல் கோடியக்கரை வரையிலும் இன்று(மே 24) மாலை 5:30 முதல் இரவு 11:30 மணி வரை கடல் அலைகள் 0.6 மீட்டர் முதல் 4.1 மீட்டர் உயரம் வரை எழும்பும் அபாயம் இருப்பதால் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பபடி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.