சிவகாசி: ஓடையில் தவறி விழுந்தவர் பலி

51பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே காமராஜர்புரம் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் (52). இவர் சம்பவத்தன்று தொண்டர் துரைசாமி நகர் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். மின்சாரம் இல்லாத நிலையில் அந்த பகுதியில் இருந்த கழிவுநீர் ஓடையில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன்இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.