நீட் போட்டி தேர்வு கையேடு வழங்கிய கலெக்டர்

53பார்த்தது
நீட் போட்டி தேர்வு கையேடு வழங்கிய கலெக்டர்
அருப்புக்கோட்டை C. S. I பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. ‌ இந்நிலையில் நேற்று ஏப்ரல் 17 இந்த நீட் பயிற்சி மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ‌ மேலும் அங்கு படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் போட்டி தேர்வு கையேட்டினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். அப்போது மாணவர்களிடம் இந்த மையத்தில் அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்தும், எப்படி படிக்கிறீர்கள் என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். அப்போது அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :