என் வாக்கு விற்பனைக்கு அல்ல விழிப்புணர்வு நிகழ்ச்சி

80பார்த்தது
என் வாக்கு விற்பனைக்கு அல்ல விழிப்புணர்வு நிகழ்ச்சி
அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி சௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இளம் தலைமுறை வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று ஏப்ரல் 17 நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தலில் யாரிடமும் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெறாமல் 100% அனைவரும் வாக்களிக்க வேண்டும், இளம் தலைமுறையினர் என் வாக்கு விற்பனைக்கு அல்ல என மற்றவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பேசி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். ‌ இதில் தேர்தல் அதிகாரிகள் கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ‌

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you