வலம்புரி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்திவிழா நடைபெற்றது

53பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே சிறுதலைப்பூண்டியில் பிரசித்திபெற்ற ஸ்ரீவலம்புரி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு சங்கடஹர சதுர்த்திவிழா நடைபெற்றது. இதையொட்டி, விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் ஸ்ரீவலம்புரி விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி