தே. மு. தி. க. நிறுவனத்தலைவரும், நடிகருமான
விஜயகாந்த் ஏழை, எளிய மக்கள் பசியால் வாடக்கூடாது என்று அன்னதானம் வழங்கினார். இந்த நிலையில் உடல்நலக் குறைவால்
விஜயகாந்த் இறந்ததையொட்டி, அவர் அன்னதானம் வழங்கியதை நினைவுகூறும் வகையிலும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் ஏழை, எளிய மக்கள் 100 பேருக்கு வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் அன்னதானம் வழங்கினார்.