100% வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியர்

53பார்த்தது
*ரொம்ப நாள் கழிச்சு தபால் பெட்டியில் தபால் போடுறன்!. வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு தபால் அனுப்பி நெகிழ்ச்சி!. *

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான தர்பகராஜ் 100% வாக்கு பதிவு நடக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விழிப்புணர்வுகளை வாக்காளர்களிடையே ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் பெரும்பாலான வாக்காளர்கள் குறைந்தபட்ச வாக்குகளை கடந்த தேர்தலின் போது செலுத்தி உள்ளதை அறிந்து அவர்களுக்கு இன்று முதற்கட்டமாக சுமார் ஆயிரம் பேருக்கு அவரவர் முகவரிக்கு 100% வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை கடிதத்தை தபால் மூலம் திருப்பத்தூர் தலைமை தபால் நிலையத்தில் தபால் பெட்டியில் கடிதத்தை செலுத்தினார். செலுத்திய பிறகு ரொம்ப நாள் ஆச்சு இதுபோல தபால் பெட்டியில் தாபாலை போட்டு என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பின்னர் தவறாமலும், பணம் பெறாமலும் வாக்குகளை செலுத்துவேன் என்று தபால் துறை ஊழியர்களுடன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.