சீரான குடிநீர் வழங்குவது குறித்து ஆட்சியர் ஆய்வு கூட்டம்!

83பார்த்தது
சீரான குடிநீர் வழங்குவது குறித்து ஆட்சியர் ஆய்வு கூட்டம்!
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் பணிகள் மற்றும் குடிநீர் பிரச்சினைகள் குறித்த துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, உதவி இயக்குனர் ஊராட்சிகள் சுதா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் பர்குணம், பங்கஜவல்லி, பேரூராட்சி உதவி இயக்குனர் அம்சா மற்றும் நகராட்சி பொறியாளர்கள் மின்சார வாரிய பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.