அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி பொதுத் தேர்தல்-2024 முன்னிட்டு 85 வயதிற்கும் மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் ஆகியோர்களின் வீடுகளில் இருந்து தபால் வாக்குகளை பதிவு செய்யும் பணியினை ஆற்காடு நகராட்சி வார்டு. 8. மறைமலை அடிகளார் தெருவில் உள்ள 88 வயது நிரம்பிய வாக்காளர் அனந்த கிருஷ்ணர் அவர்கள் தன்னுடைய வாக்கினை வீட்டிலிருந்தபடியே தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி செலுத்தியதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி, பார்வையிட்டார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஏகாம்பரம். வட்டாட்சியர் அருள்செல்வன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உள்ளனர்.