வேன் மரத்தில் மோதி விபத்து - 4 மாணவர்கள் பலி

62பார்த்தது
வேன் மரத்தில் மோதி விபத்து - 4 மாணவர்கள் பலி
உத்தர பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த வேன் மரத்தில் மோதிய விபத்தில் நான்கு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். ஆறு பேர் காயமடைந்தனர். மாநில அளவிலான தேர்வு எழுத மாணவர்கள் புறப்பட்ட நிலையில், ஜார்வான் கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடந்துள்ளது. ஜைதிபூரில் உள்ள லதுரி சிங் கல்லூரிக்கு மாணவர்கள் தேர்வுக்காக சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி