அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாஜகவில் இணையப்போவதாக சமீபத்தில் செய்தி பரவியது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அதிமுக செய்தி தொடர்பாளர் சண்முக சுந்தரம், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி குறித்து வெளியாகும் தகவல் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. இது அயோக்கியத்தமான முயற்சி. அதிமுக தொண்டர்களின் மன உறுதியை குலைக்கும் வகையில் இந்த வதந்திகளை பரப்பிவருகின்றனர். இந்த அறமற்ற அரசியலை பாஜகவும், திமுகவும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.